இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று சந்தித்துப் பேசினார். கொழும்பில் உள்ள சம்பந்தன் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் சம்பந்தனுடன் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரனும் இணைந்திருந்தார்.
அனைத்து இலங்கையர்களுக்குமான அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியின் அவசியம் குறித்து இதன்போது விவாதித்ததாக சந்திப்பின் பின்னர் இட்ட ட்விட்டர் பதிவில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி குறித்த மேலதிக உரையாடல்களை எதிர்பார்த்திருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.